செய்திகள்
தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2020-05-20 11:57 GMT   |   Update On 2020-05-20 11:57 GMT
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுண்ணாம்பு ஜீபி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் காவியாஸ்ரீ (வயது 15). இவர் ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஊரடங்கு விடுமுறையால் மாணவி சரியாக படிக்காமல் இருந்து வந்தார். இந்தநிலையில் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதால் மகளை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த காவியாஸ்ரீ வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பர்கூர் அடுத்த குருகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மஞ்சுளா(43). சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மஞ்சுளா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News