செய்திகள்
தொழிலாளி தாக்குதல்

திருப்பூர் அருகே தொழிலாளியை கல்லால் தாக்கிய 2 பேர் கைது

Published On 2020-05-20 10:26 GMT   |   Update On 2020-05-20 10:26 GMT
திருப்பூர் அருகே தொழிலாளியை கல்லால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(வயது 32). பனியன் நிறுவன தொழிலாளி.இவர் தனது நண்பர்களான போயம்பாளையத்தை சேர்ந்த முருகன்(32), புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த அப்துல்(26)ஆகியோருடன் நேற்று கல்லம்பாளையம் காட்டுப்பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் முருகன், அப்துல் இருவரும் கல்லால் தாக்கியதில் சிவப்பிரகாசத்துக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சிவப்பிரகாசம் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், அப்துல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News