செய்திகள்
கைது

திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்- 4 பேர் கைது

Published On 2020-05-18 12:35 GMT   |   Update On 2020-05-18 12:35 GMT
திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம் ஒண்டிகுப்பம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தியதாக மணவாளநகரை சேர்ந்த அஸ்வின் (வயது 25), ஜெகதீசன் (32) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றினர்.

அதே போல திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் போலீசார் நேற்று செஞ்சி கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு மணல் கடத்தியதாக செஞ்சி கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவரான அஜித் குமார் (22) மற்றும் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அடுத்த தாசகுப்பத்தை சேர்ந்த பொக்லைன் எந்திர டிரைவரான ரமேஷ் (27) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரு டிராக்டர், ஒரு பொக்லைன் எந்திரம் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். 
Tags:    

Similar News