செய்திகள்
சாயல்குடி அருகே மணல் அள்ளிய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாயல்குடி:
சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மலட்டாறு ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்து சாயல்குடி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக புல்லந்தை கிராமத்தை சேர்ந்த செந்தில், சரவணன் ஆகியோர் மீது சாயல்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.