செய்திகள்
கொலை

மதுரை அருகே இன்சூரன்ஸ் ஏஜெண்டை எரித்துக் கொன்றது யார்? போலீசார் விசாரணை

Published On 2020-05-18 09:48 GMT   |   Update On 2020-05-18 09:48 GMT
மதுரை அருகே இன்சூரன்ஸ் ஏஜெண்டை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டப்புளிநகர் தனியார் பஞ்சு ஆலையின் பின்புறம் கண்மாய்கரைக்கு செல்லும் சாலையின் அருகில் நேற்று காலை சுமார் 52 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கழுத்து அறுக்கப்பட்டு தலையில் கல்லால் தாக்கப்பட்டும் ரத்தக் காயங்களுடன் எரிந்த நிலையில் கிடந்தது.

அந்த நபர் கருப்பு நிற பேண்டும், ரோஸ் கலரில் கட்டம் போட்ட சட்டையும் பனியனும் அணிந்து இருந்தார்.

தகவல் அறிந்த சமயநல்லூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது பிணத்தின் பையில் இருந்த விசிட்டிங் கார்டில் சிவக் குமார் தனியார் இன்சூரன்ஸ் ஏஜெண்டு, எஸ்.எஸ்.காலனி, மதுரை என்ற முகவரியிருந்தது.

அதை வைத்து விசாரணை செய்தபோது எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக இருப்பது சிவக்குமார் தான் என்றும் அவருக்கு சாந்தி என்ற மனைவியும் 2 வயது குழந்தையும், இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.

சிவக்குமாரை கொலை செய்தது யார்? முன் விரோதம் காரணமா? தொழில் போட்டியா? கள்ளகாதல் விவகாரமா? போதையால் நடந்த கொலையா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வரு கின்றனர்.

Tags:    

Similar News