செய்திகள்
திண்டிவனம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
திண்டிவனம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே வைரபுரம் ஏரிக்கரையில் சாராயம் விற்றதாக கொடநல்லூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம், சலவாதி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் ஆகியோரை வெள்ளிமேடுபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.