செய்திகள்
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த முடிவு
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே எழுத பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1ந்தேதி முதல் நடைபெற உள்ளது. மாணவர்கள் தேர்வுகளை எழுத பள்ளிக்கு செல்ல சிறப்பு பஸ்கள் எற்பாடு செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தமிகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே எழுத பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக ஒரு அறையில் 10-மாணவர்கள் மட்டுமே எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.