செய்திகள்
கோப்பு படம்.

சென்னைக்கு 14, 16 ஆகிய தேதிகளில் மட்டுமே ரெயில் சேவை இயக்கப்படும்- ரெயில்வே

Published On 2020-05-12 13:01 GMT   |   Update On 2020-05-12 13:01 GMT
மே 14, 16 தேதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டதால் 2 நாள் மட்டுமே ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதால் ரெயில்களை இயக்க வேண்டாம் என பிரதமருடனான காணொலியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக ரெயில்வே அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் மே 14, 16 ஆகிய தேதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டதால் டெல்லியில் இருந்து சென்னைக்கு  2 நாள் மட்டும் ரெயில்கள் இயக்கப்படும். இந்த 2 நாட்களை தவிர வழக்கமான ரெயில் சேவைகள் இயக்கப்படாது என ரெயில்வே துறை அறிவித்துள்ளது.
Tags:    

Similar News