செய்திகள்
கைது

மாணவிக்கு பாலியல் தொந்தரவு- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2020-05-12 11:33 GMT   |   Update On 2020-05-12 11:33 GMT
ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஆட்டுப்பாறை பகுதியை சேர்ந்த மோகன் மகன் ஸ்ரீராம் (வயது24). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்துள்ளார்.

பாட்டி வீட்டில் தங்கி படித்த மாணவியுடன் ஆசை வார்த்தைகள் கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்றார். சம்பவத்தன்று அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தினார். இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறினார். இது குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் ஸ்ரீராம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News