செய்திகள்
மதுரை அருகே வீட்டில் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மேலபொன்னகரம் 3-வது தெருவை சேர்ந்தவர் மணவாளன் (வயது 93). வயதாகி விட்டதால் இவரையும், இவரது மனைவியையும் மதுரை செல்லூர் தத்தனேரியை சேர்ந்த சரண்யா (30) என்பவர் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் தனது வீட்டில் இருந்த 4 பவுன் நகை மாயமாகி விட்டதாகவும், இது குறித்து சரண்யா மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசில் மணவாளன் புகார் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.