செய்திகள்
கைது

நகராட்சி பெண் பணியாளரை மிரட்டிய 2 பேர் கைது

Published On 2020-05-08 14:36 GMT   |   Update On 2020-05-08 14:36 GMT
வெட்டிக்கோணம் பகுதியில் ஆய்வுக்கு சென்றபோது நகராட்சி பெண் பணியாளரை தடுத்து நிறுத்தி பணி செய்யவிடாமல் மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பத்மநாபபுரம்:

தக்கலையை அடுத்த நகராட்சி காலனியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி செல்வி (வயது 38). இவர் பத்மநாபபுரம் நகராட்சியில் டெங்கு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வெட்டிக்கோணம் பகுதியில் ஆய்வுக்கு சென்றபோது, அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ராஜேஷ் (29), சுபாஷ் (27) ஆகிய 2 பேரும் செல்வியை தடுத்து நிறுத்தி அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரை ஆபாச வார்த்தைகளாலும் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தக்கலை போலீசில் செல்வி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News