செய்திகள்
முதல்வர் பழனிசாமி.

காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி- முதல்வர் உத்தரவு

Published On 2020-05-05 12:20 GMT   |   Update On 2020-05-05 12:20 GMT
ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகரின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

ஜம்மு- காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகளுடனான துப்பாக்சிச் சண்டடையில் தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் வீரமரணம் அடைந்தார். 

இந்நிலையில் சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகரின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சந்திரசேகரின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறவும், அமைச்சர் ராஜலட்சுமி மாவட்ட கலெக்டர், எஸ்பிக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளேன். சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News