செய்திகள்
நகை திருட்டு

தக்கலை அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் நகை திருட்டு

Published On 2020-05-04 14:25 GMT   |   Update On 2020-05-04 14:25 GMT
தக்கலை அருகே காற்றுக்காக ஜன்னல் கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தக்கலை:

தக்கலை அருகே அமராவதி பகுதியைச் சேர்ந்தவர் இக்பால். ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி ஷைராபானு. நேற்று இரவு இவர்கள் வீட்டில் தூங்கினர். காற்றுக்காக ஜன்னல் கதவை திறந்து வைத்திருந்தனர். 

நள்ளிரவில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கையை விட்டு ஷைராபானு கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து தக்கலை போலீசில் இக்பால் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதேபோல் திருவிதாங்கோடு பெருந்தெருவைச் சேர்ந்தவர் அபுதாகீர். இவர் வீட்டில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். இதுகுறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். 
Tags:    

Similar News