search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sleeping woman"

    சங்கரன்கோவில் அருகே தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்மநபர் திருடி தப்பி சென்று விட்டார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள தளவாய்புரம் மேலத் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி பிரமு (வயது 45). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று இரவு காற்றிற்காக வீட்டின் முன் அறையில் வெளிகதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தனர். 

    இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு அங்கு வந்த மர்மநபர் தூங்கி கொண்டிருந்த பிரமுவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை அறுத்து கொண்டு செல்ல முயன்றுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த பிரமு சத்தம் போடுவதற்குள் மர்மநபர் செயினுடன் தப்பி ஓடிவிட்டார்.

    சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மர்மநபரை விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இது குறித்து புகாரின் பேரில் சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×