செய்திகள்
முதல்வர் பழனிசாமி

சென்னை ராஜ்பவனில் ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

Published On 2020-05-04 11:49 GMT   |   Update On 2020-05-04 11:49 GMT
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி சந்தித்து பேசினார். கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வுகள் உள்ளிட்டவை பற்றி ஆளுநருடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. 

இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். 
Tags:    

Similar News