செய்திகள்
தமிழக அரசு

மே மாதத்திற்கான ரேசன் பொருட்களுக்கு டோக்கன் வழங்கும் தேதியில் மாற்றம்

Published On 2020-04-24 04:53 GMT   |   Update On 2020-04-24 04:53 GMT
மே மாதத்திற்கான ரேசன் பொருட்களுக்கு டோக்கன் வழங்கும் தேதியில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவில் எந்த தளர்வும் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்களை பெற வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஏதுவாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில் டோக்கன் வழங்கும் தேதியை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது மே 2 மற்றும் 3-ம் தேதிகளில் டோக்கன் வழங்கப்படும் எனவும் மே 4-ம் தேதியில் இருந்து ரேசன் பொருட்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேசன் கடையில் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்.

மேலும் ரேசன் பொருட்களை டோக்கன், சமூக இடைவெளி நடைமுறையை கடைப்பிடித்து மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.   
Tags:    

Similar News