செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலம் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
கொரோனா தொற்று பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்.எஸ்.மங்கலம் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
ஆர்.எஸ். மங்கலம்:
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் மற்றும் தொற்றுநோய்கள் எதுவும் பரவாத வகையில் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு தொற்று நோய் பரவாத வகையில் பணியாளர்களின் குடும்ப நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்.எஸ் .மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேரூராட்சியில் பணியாற்றிவரும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் 13 பேர் மற்றும் தற்காலிக பணியாளர்கள் 35 பேர் உட்பட அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் செயல் அலுவலர் மெய்ம்மொழி, அலுவலக இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்றது. பணியாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் மற்றும் தொற்றுநோய்கள் எதுவும் பரவாத வகையில் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு தொற்று நோய் பரவாத வகையில் பணியாளர்களின் குடும்ப நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்.எஸ் .மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேரூராட்சியில் பணியாற்றிவரும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் 13 பேர் மற்றும் தற்காலிக பணியாளர்கள் 35 பேர் உட்பட அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் செயல் அலுவலர் மெய்ம்மொழி, அலுவலக இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்றது. பணியாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.