search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical camp"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எண்ணூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பசுமைத் தாயம் அமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
    • அன்புமணி ராமதாஸ் பொதுமக்களை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

    சென்னை :

    சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவ பரிசோதனை செய்தார்.

    எண்ணூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பசுமைத் தாயம் அமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பொதுமக்களை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

    • ரூபெல்லா தடுப்பூசி ஒரு டோஸ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • 440 பணியாளர்கள் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை துணை இயக்குனர் ஜவஹர்லால் மேற்பார்வையில் 55 மருத்துவ குழுவைக் கொண்டு 144 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

    நாளை முதல் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி ஒரு டோஸ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 250 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் இருந்து 55 மருத்துவ குழுவினர், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து 33 மருத்துவ குழுவினர் மற்றும் 440 பணியாளர்கள் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • மருத்துவ முகாம்கள்காலை 8.05 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப் பட உள்ளன.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டது.

    சென்னை மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விஜய் உத்தரவின் பேரில் மக்கள் இயக்கம் சார்பில் பொது மக்களுக்கு உணவு, பாய், பால், ரொட்டி, ஸ்டவ் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

    இது குறித்து மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகிற 14-ந்தேதி அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

    வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்து வர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள இம்மருத் துவ முகாம்கள் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப் பட உள்ளன. பொதுமக்களின் நலன் காக்கும் இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    வடசென்னை

    46-வது வார்டு: முல்லை நகர், அசோக் பில்லர், அரசு உயர்நிலைப்பள்ளி அருகில்.

    45-வது வார்டு: பி.பி.ரோடு, கரிமேடு, வியாசர்பாடி, தீயணைப்பு நிலையம் அருகில்.

    35-வது வார்டு: கொடுங்கையூர், முத்தமிழ்நகர், பள்ளிவாசல் அருகில்.

    72-வது வார்டு: கஸ்தூரிபாய் காலனி, ஏ பிளாக், கன்னிகாபுரம், மக்கள் மறுமலர்ச்சி மன்றம் அருகில்.

    75-வது வார்டு: சுப்பு ராயன் 4-வது தெரு.

    65-வது வார்டு: முத்து மாரியம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர்.நகர் எஸ்.பி.ஐ. அருகில்.

    41-வது வார்டு: கருமாரி யம்மன் தெரு, தூய இருதய மெட்ரிகுலேசன் பள்ளி அருகில், கொருக்குப் பேட்டை.

    தென்சென்னை

    141-வது வார்டு: காமராஜ் காலனி, தி.நகர் பஸ் நிலையம் அருகில்.

    133-வது வார்டு: ஆனந்தன் தெரு, முப்பத்தம்மா கோவில் அருகில்.

    132-வது வார்டு: ஐந்து விளக்கு, புண்ணியகோடி கல்யாண மண்டபம்.

    134-வது வார்டு: பிருந்தா வனத் தெரு, ஹவுசிங் போர்டு அருகில்.

    130-வது வார்டு: அம்மன் கோவில் தெரு, கிழக்கு வடபழனி முருகன் கோவில் அருகில்.

    135-வது வார்டு: 83-வது தெரு, மேல்புதூர், அசோக்நகர்.

    131-வது வார்டு: 61-வது தெரு, அம்மா உணவகம் அருகில், நல்லாங்குப்பம்.

    180-வது வார்டு: திருவான்மியூர் இ.சி.ஆர். சாலை, ஆர்.டி.ஓ. ஆபீஸ் அருகில்.

    178-வது வார்டு: தரமணி, தந்தை பெரியார் நகர், தரமணி பஸ் நிலையம் அருகில்.

    121-வது வார்டு: கணேசபுரம் அருகில், சிட்டி சென்டர் பின்புறம்.

    123-வது வார்டு: லாக்நகர், மந்தவெளி ஆர்.டி.ஓ. ஆபீஸ் அருகில்.

    139-வது வார்டு: பாரதிதாசன் காலனி, ஜாபர்கான்பேட்டை அருகில்.

    140-வது வார்டு: சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில்.

    120-வது வார்டு: முத்தையா தோட்டம் அருகில்.

    மத்திய சென்னை

    58, 99, 77-வது வார்டுகள்: ஐயப்ப மைதானம், திரு நாராயணகுரு சாலை, பெரியமேடு, சூளை, சென்னை டவுட்டன் பாலம் அருகில்.

    108-வது வார்டு: எம்.எஸ்.நகர், அம்பேத்கர் திடல், மங்களபுரம் போலீஸ் பூத் அருகில், எழும்பூர்.

    84, 95-வது வார்டு: திரு வெங்கடய்யா முதல் தெரு, வில்லிவாக்கம்.

    98-வது வார்டு: குட்டி யப்பன் தெரு, பம்பிங் ஸ்டே ஷன், அயனாவரம் மன நிலை காப்பகம் அருகில், அயனாவரம், கீழ்ப்பாக்கம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முகாமில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டார்கள்.
    • கண் மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டது.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை சக்தி மகளிர் டிரஸ்ட் குலசேகரம் மூகாம்பிகை மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாமை தளவாய் சுந்தரம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

    தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் டாக்டர் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நடந்த முகாமில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டார்கள்.

    கண் மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டது.

    கண் மருத்துவர் டாக்டர் குமார் பொது மருத்துவர் டாக்டர் விகாஷ் ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழு பொதுமக்களுக்கு சிசிச்சை அளித்தது.

    முன்னாள் கவுன்சிலர் தர்மராஜ் ஆசிரியர் சேகர் மற்றும் சக்தி மகளிர் டிரஸ்ட் உறுப்பினர்கள் மருத்துவமனை பிஆர்ஓ சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஈஷா மருத்துவக் குழு வழங்கி வருகிறது.
    • நிலவேம்பு குடிநீர் தினமும் தயார் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பொழிந்த அதிகனமழை காரணமாக நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இவ்வாறு வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஈஷா மருத்துவக் குழு வழங்கி வருகிறது.

    இதற்காக கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து 'ஈஷா அவுட்ரீச்' சார்பில் நடமாடும் மருத்துவ வாகனங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் சென்னை சென்றடைந்தனர்.

    இவர்கள் மூன்று மருத்துவ குழுக்களாக இயங்கி, வட மற்றும் தென் சென்னையின் வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.

    இது தவிர 3 நடமாடும் மருத்துவ வாகனங்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் நிலவேம்பு குடிநீர் தினமும் தயார் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    https://twitter.com/Outreach_Isha/status/1733190433667498209?t=ji4hApdq6xBtaPZPQdv8Jw&s=19

    ஈஷா யோக மையம் இதற்கு முன்பு 2004 - இல் ஏற்பட்ட சுனாமி, 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளம், கஜா புயல் மற்றும் 2020 - ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களினால் பாதிக்கபட்ட மக்களுக்கு அப்பொழுது தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் பிற நிவாரண உதவிகளை பெருமளவில் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நல்ல மருது நினைவு தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம் நடந்தது.
    • 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி நல்ல மருதுவின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில்  அவரது திருஉருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    இதில் மாநகர் மாவட்ட தி.மு.க. முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி தலைமையில் பகுதி செயலாளர் ஈஸ்வரன், கவுன்சிலர் போஸ் முத் தையா, வட்டக் கழக செயலாளர் பாலா என்ற பால சுப்பிரமணியன் கவுன்சிலர் வழக்கறிஞர் குட்டி என்ற ராஜரத்தினம், நேதாஜி ஆறுமுகம் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ், சூரியவர்மன், கௌதம் போஸ், விஷ்ணுவர்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.

    இதனைத் தொடர்ந்து 200 பேர் ரத்ததானம் வழங்கினர். பின்னர் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண் பரிசோதனை சிறப்பு முகா மும் நடைபெற்றது. தொடர்ந்து 2000 பேருக்கு அன்னதானத்தை எஸ்ஸார் கோபி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் தி.மு.க. முன் னாள், இன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநகர், புற நகர், பகுதி, வட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா தொடங்கி வைத்தார்.
    • நாமக்கல் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியா ளர்களில் ஆண்கள் 49 மற்றும் பெண்கள் 49 ஆக மொத்தம் 98 பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 121 மற்றும் பெண்கள் 182 ஆக மொத்தம் 303 பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 401 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மை பணியா ளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா தொடங்கி வைத்தார். இதில் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திலுள்ள 5 நகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டு நாமக்கல் நகராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியா ளர்களில் ஆண்கள் 49 மற்றும் பெண்கள் 49 ஆக மொத்தம் 98 பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 121 மற்றும் பெண்கள் 182 ஆக மொத்தம் 303 பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 401 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

    இதேபோல் குமாரபாளையம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 288 பேர் பயன்பெறும் வகையில் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    மேலும் ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்க ளுக்கான மருத்துவ சிகிச்சை முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் அனைத்து தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டு உடல் பரிசோத னைகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் டாக்டர் உமா பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி நகர்மன்ற தலைவர் கலாநிதி, நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • முகாமினை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் தொடங்கி வைத்தார்.
    • 87பேர் மேல் சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவ மனைக்கு பரிந்து ரைக்கப்படனர்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவமனை சூனாம்பேடு சுகாதார மையத்தில் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட தேவாலயத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மருத்துவமனையின் மருத்துவ துறை மற்றும் பிம்ஸ் சுகாதார மையம் இணைந்து இலவச மருத்துவ முகாமினை

    நடத்தியது. முகாமினை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் தொடங்கி வைத்தார். அருட் தந்தை ஜோபி ஜார்ஜ் முன்னிலை வகித்தார்.ஊர் துணை தலைவர் தெய்வசிகாமணி, மற்றும் பழனி, ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    முகாமில் மருத்துவர்கள் பீட்டர் பிரசாந்த், அச்சு ஜார்ஜ், ஹெனா உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு 400-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதில் 87பேர் மேல் சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவ மனைக்கு பரிந்து ரைக்கப்படனர். 97பேருக்கு சர்க்கரை பரிசோதனை மற்றும் 8 பேருக்கு கர்ப்ப பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 47 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

    • முதுகுளத்தூர் அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் சீதா நாகராஜன் தலைமை தாங்கினார்.

    பசும்பொன்

    முதுகுளத்தூர் அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் கால்நடை சுகாதார மருத்துவ முகாம் நடைபெற்றறது. சிக்கல் கால்நடை மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சீதா நாகராஜன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் அரவிந்த் (சிக்கல்), அரவிந்தன் (சாயல்குடி), கால்நடை ஆய்வாளர்கள் ரெஜினாராணி, உஷா, கால்நடை உதவியாளர் பாலதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு குடல் புழு நீக்கம், சினை பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.

    • நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மனுக்கள் பெறப்பட்டது
    • மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது.

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார். சப்- கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் இனியன் வரவேற்றார். இதில் ஏராளமான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    மேலும் மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாற்று திறனாளிகளிடமிருந்து அனைத்துத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மனுக்கள் பெறப்பட்டது.

    கண் மருத்துவ பிரிவு, காது-மூக்கு-தொண்டை, எலும்பு மூட்டு சிகிச்சை, குழந்தை நலப்பிரிவு, மன நோய் பிரிவு உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    • வருகிற 23-ந்தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2023-2024 நிதியாண்டில் பல்வேறு வகையான அரசு நலத்திட்டங்கள் எளிதில் எவ்வித சிக்கல்கள் இன்றி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடைய ஏதுவாக பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்புடன் மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வாணியம்பாடி வருவாய் உள் வட்டத்தில் இஸ்லாமியா கல்லூரி அருகில் அமைந்துள்ள அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வருகிற 23-ந் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் புதியதாக தேசிய அடையாள அட்டை பெற விரும்பும் நபர்கள் அனைவரும் இச்சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமாநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கலெக்டர் விஷ்ணு சந்திரன் பரிசோதனை செய்து கொண்டார்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமை கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன் னிலை வகித்தார்.

    இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகள் நலம், அறுவை சிகிச்சை மருத்து வம், தோல் சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், தொடர் பான அனைத்து வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் மேல் சிகிச்சை தேவைப்படு பவர்களுக்கு ஆலோசனை களும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் டாக்டர் ரத்தின குமார், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×