செய்திகள்
கோப்புபடம்

பட்டுக்கோட்டையில் டாஸ்மாக்கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை

Published On 2020-04-08 08:41 GMT   |   Update On 2020-04-08 08:41 GMT
பட்டுக்கோட்டையில் டாஸ்மாக்கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடித்தது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் பைபாஸில் டாஸ்மாக் கடை உள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக்கடை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மர்ம நபர்கள் டாஸ்மாக்கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கனை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் பட்டுக்கோட்டை அடுத்த சூரப்பள்ளம் கீழத்தெரு பகுதியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சித்திரவேல் (வயது 33), அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (25) இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த திருட்டில் தொடர்புடையதாக கூறப்படும் வெற்றி (23), நந்தகுமார் (40) ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News