செய்திகள்
மழை

அதிராம்பட்டினத்தில் ஒரு மணி நேரம் பலத்த மழை

Published On 2020-04-05 11:59 GMT   |   Update On 2020-04-05 11:59 GMT
அதிராம்பட்டினத்தில் இன்று காலை ஒரு மணி நேரம் பலத்த மழை செய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதிராம்பட்டினம்:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஊரடங்கும் உத்தரவு அமலில் உள்ளதையொட்டி பொதுமக்கள் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்குவதற்கும் காலை நேரத்தில் சென்று வந்த நிலையில் காலை 8 மணிக்கு ஆரம்பம் ஆகும் வெயில் மாலை 5 மணிக்குதான் மறையும் இப்படி கடுமையான வெயில் வாட்டி வந்ததால் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். 

இந்தநிலையில் இன்று அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக பலத்த மழையாக பெய்தது.

இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த மழையால் கொரோனா வைரஸ் தாக்கம் இருக்காது என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News