செய்திகள்
தேனி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 2,698 பேர்கள் மீது வழக்கு
தேனி மாவட்டத்தில் கடந்த 9 நாட்களில் 144 தடை உத்தரவை மீறிய 2,698 பேர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தேனி:
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு, 144 தடை உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் கடந்த 25.3.2020-முதல் வருகின்ற 14.4.2020-வரை 21 நாட்கள் அறிவித்துள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் மட்டும் வெளியில் சென்று வந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த தடை உத்தரவினை மீறியதாக தேனி மாவட்டத்தில் கடந்த 25.3.2020- முதல் 27.3.2020- வரை போலீஸ் துறையினரால் 203 பேர்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தேவையில்லாத காரணங்களால் வெளியில் சுற்றி திரிந்து கொண்டிருந்த 153 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதுபோல கடந்த 28.3.2020-அன்று 259 பேர் மீது வழக்கு பதிவும், 209 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 29.3.2020- அன்று 68 பேர் மீது வழக்குபதிவு செய்து 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று கடந்த 30.3.2020, 31.3.2020 ஆகிய 2 நாட்களில் 847 பேர் மீது வழக்கு பதிவும், 513 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதுபோல 1.4.2020, 2.4.2020 ஆகிய 2 நாட்களில் 1,321 பேர் மீது வழக்கு பதிவும், 582 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி மாவட்டத்தில் இதுவரை கடந்த 9 நாட்களில் (24.3.2020-முதல் 2.4.2020-வரை) 2,698 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 1,483 மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு, 144 தடை உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் கடந்த 25.3.2020-முதல் வருகின்ற 14.4.2020-வரை 21 நாட்கள் அறிவித்துள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் மட்டும் வெளியில் சென்று வந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த தடை உத்தரவினை மீறியதாக தேனி மாவட்டத்தில் கடந்த 25.3.2020- முதல் 27.3.2020- வரை போலீஸ் துறையினரால் 203 பேர்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தேவையில்லாத காரணங்களால் வெளியில் சுற்றி திரிந்து கொண்டிருந்த 153 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதுபோல கடந்த 28.3.2020-அன்று 259 பேர் மீது வழக்கு பதிவும், 209 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 29.3.2020- அன்று 68 பேர் மீது வழக்குபதிவு செய்து 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று கடந்த 30.3.2020, 31.3.2020 ஆகிய 2 நாட்களில் 847 பேர் மீது வழக்கு பதிவும், 513 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதுபோல 1.4.2020, 2.4.2020 ஆகிய 2 நாட்களில் 1,321 பேர் மீது வழக்கு பதிவும், 582 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி மாவட்டத்தில் இதுவரை கடந்த 9 நாட்களில் (24.3.2020-முதல் 2.4.2020-வரை) 2,698 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 1,483 மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.