செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
சென்னை:
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்துள்ளார். தமிழகத்தில் 144 தடை உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி இந்த உரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநில நிதி நிலவரம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்துள்ளார். தமிழகத்தில் 144 தடை உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி இந்த உரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநில நிதி நிலவரம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.