செய்திகள்
கண்ணமங்கலம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி மாயம்
கண்ணமங்கலம் அருகே கல்லூரிக்கு சென்ற நர்சிங் கல்லூரி மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் ஊராட்சியை சேர்ந்த சின்னபுஷ்பகிரி கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண். ஆரணியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த 19-ந்தேதி காலை கல்லூரி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் தந்தை தந்தை சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.
காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன், வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்.