search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nursingh college student"

    உறவினருடன் பஸ்சில் வந்த நர்சிங் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகூர்:

    விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மகள் தேவிகலா (வயது 19).

    இவர், கடலூரில் உள்ள நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்தார். சம்பவத்தன்று தேவிகலா கல்லூரி முடிந்து சொந்த ஊருக்கு செல்ல உறவினர் தேவராஜ் என்பவருடன் பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.

    தவளக்குப்பம் சந்திப்பில் பஸ் நின்ற போது, திடீரென தேவிகலா பஸ்சை விட்டு இறங்கினார். சிறிது நேரத்தில் தேவிகலா மாயமானார். தோழிகள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் தேவிகலா இல்லை.

    இதையடுத்து தேவிகலா மாயமானது குறித்து தேவராஜ் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து யாராவது தேவிகலாவை கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×