செய்திகள்
முதல்வர் பழனிசாமி.

கொரோனா முன்னெச்சரிக்கை பணிகள்- முதல்வர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை

Published On 2020-03-19 11:51 GMT   |   Update On 2020-03-19 11:51 GMT
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. இது வரை 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலைலயில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கொரோனா தடுப்பு ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News