செய்திகள்
விபத்து

இருசக்கர வாகனம் மீது அரசு பஸ் மோதல்: டிரைவர் பலி

Published On 2020-03-18 13:40 GMT   |   Update On 2020-03-18 13:40 GMT
தர்மபுரியில் இருசக்கர வாகனம் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சகாதேவன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் செல்வமணி (வயது 24). இவர் டிரைவர் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று சகாதேவன் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி பைபாஸ் சாலை ராமக்காள் ஏரி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அரசு பஸ் செல்வமணி ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் செல்வமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் செல்வமணியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News