செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

பொள்ளாச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் நகை திருட்டு

Published On 2020-03-13 09:35 GMT   |   Update On 2020-03-13 09:35 GMT
பொள்ளாச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டி அன்னை சத்யா வீதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று காலை அருகிலிருந்தவர்கள் பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தர்ம லிங்கத்திற்கும், பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது .பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மலிங்கத்தின் வீட்டில் வைத்திருந்த நகை திருடப்பட்டுள்ளது. சுமார் 80 பவுன் நகை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு எத்தனை பவுன் நகை திருடப்பட்டது என்பது முழுமையாக தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

Similar News