செய்திகள்
தஞ்சை அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள செல்லப்பன் பேட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் விவசாயி அண்ணாதுரை. இவர் சம்பவத்தன்று மாலை மொபட்டில் தஞ்சை- திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தார். முன்னையம்பட்டி பிரிவு சாலையில் செல்வதற்காக வலது புறமாக அண்ணா துரை மொபட்டை திருப்பி உள்ளார்.
அப்போது தஞ்சையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மொபட் மீது படுவேகமாக மோதியது. இதில் அண்ணாதுரை சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அண்ணாதுரையின் மனைவி பரமேஸ்வரி (44) கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த தேனி மாவட்டம் உத்தமபாளையம் காந்திஜி தெருவை சேர்ந்த வனராஜன் (45) என்பவர் மீது வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சையை அடுத்துள்ள செல்லப்பன் பேட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் விவசாயி அண்ணாதுரை. இவர் சம்பவத்தன்று மாலை மொபட்டில் தஞ்சை- திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தார். முன்னையம்பட்டி பிரிவு சாலையில் செல்வதற்காக வலது புறமாக அண்ணா துரை மொபட்டை திருப்பி உள்ளார்.
அப்போது தஞ்சையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த கார் மொபட் மீது படுவேகமாக மோதியது. இதில் அண்ணாதுரை சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அண்ணாதுரையின் மனைவி பரமேஸ்வரி (44) கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த தேனி மாவட்டம் உத்தமபாளையம் காந்திஜி தெருவை சேர்ந்த வனராஜன் (45) என்பவர் மீது வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.