செய்திகள்
தற்கொலை

குடும்பத் தகராறில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2020-03-01 16:50 GMT   |   Update On 2020-03-01 16:50 GMT
பொம்மிடி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த பி.துரிஞ்சிப் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கார்த்தி (வயது32). இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். 

இந்த நிலையில் கார்த்திக்கிற்கு குடிப்பழக்கம் இருந்த வந்தது. அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் மனைவி கவிதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கோபித்து கொண்டு கவிதா அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் விரக்தி அடைந்த கார்த்திக் அருகிலுள்ள சுடுகாட்டுக்கு சென்று விஷம் அருந்தியுள்ளார். இதில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்துபொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News