செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது - அன்புமணி ராமதாஸ்

Published On 2020-02-29 16:25 GMT   |   Update On 2020-02-29 16:25 GMT
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் அளித்த பேட்டியில், யாருடைய குடியுரிமையையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் பறிக்காது என தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக முதலமைச்சர் பழனிசாமியை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று இரவு சந்தித்துப் பேசினார்.  அவருடன் முன்னாள் மத்திய இணை மந்திரி ஏ.கே. மூர்த்தி, அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி உள்பட பலர் சென்றிருந்தனர்.

அதன்பின்னர், அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் ஆனது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News