செய்திகள்
கைது

மதுபோதையில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்த 2 பேர் கைது

Published On 2020-02-28 06:53 GMT   |   Update On 2020-02-28 06:53 GMT
மதுபோதையில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை பூக்கடை, ரத்தன் பஜார் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 25-ந்தேதி இரவு அதில் இருந்த எந்திரத்தை 2 வாலிபர்கள் உடைத்தனர். பொதுமக்கள் வந்ததும் அவர்கள் தப்ப ஓடி விட்டனர்.

பூக்கடை போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். கார்டை போட்டுப் பணம் வராததால் ஆத்திரத்தில் கண்ணாடியை கையால் அடிப்பது போல் பதிவாகி இருந்தது.

இது தொடர்பாக சிதம்பரத்தைச் சேர்ந்த சுதாகர், சூரியா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் வேலை தொடர்பாக சென்னைக்கு வந்ததாகவும் மதுபோதையில் பணம் எடுக்கும்போது பணம் வராததால் ஆத்திரத்தில் ஏ.டி.எம். கண்ணாடியை உடைத்ததாக கூறி உள்ளனர். இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News