செய்திகள்
டாக்டர் கிருஷ்ணசாமி

திருச்சியில் 27-ந்தேதி புதிய தமிழகம் கட்சி பொதுக்கூட்டம்- கிருஷ்ணசாமி பேசுகிறார்

Published On 2020-02-25 12:21 GMT   |   Update On 2020-02-25 12:21 GMT
குடியுரிமை சட்டத்தை ஆதரித்து திருச்சியில் 27-ந்தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
திருச்சி:

புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி மலைக்கோட்டை வழுக்குப்பாறை ஆண்டாள் வீதியில் நாளை மறுநாள் (27-ந்தேதி, வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் வரவேற்று பேசுகிறார். மாவட்ட செயலாளர்கள் குணா, தினகரன், இளையராஜா, பிச்சமுத்து, நம்பிராஜ் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி குடியுரிமை சட்டம் பாதுகாப்பு மற்றும் அதன் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விளக்கி பேசுகிறார். 

முடிவில் ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் சண்முகம் நன்றி கூறுகிறார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News