search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய தமிழகம் கட்சி"

    • பாராளுமன்ற தேர்தலில் கட்சி கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்க தலைவர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தேர்தலில் 2 அல்லது 3 இடங்களை கேட்க திட்டமிட்டுள்ளோம்.

    குனியமுத்தூர்:

    டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சி செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. அங்கம் வகித்த கூட்டணியில் இடம் பெற்று இருந்தது. தற்போது அந்த கூட்டணி உடைந்து ள்ளது. இதன் காரணமாக டாக்டர் கிருஷ்ணசாமி, எந்த அணியுடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

    இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் கோவை குனியமுத்தூரில் உள்ள டாக்டர் கிருஷ்ணசாமி இல்லத்தில் நடந்தது. பாராளுமன்ற தேர்தலில் கட்சி கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்க தலைவர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான காலக்கட்டத்தில் நடக்கிறது. எனவே வலுவான கூட்டணியில் இடம்பெற திட்டமிட்டுள்ளோம். அது எண்ணிக்கை மற்றும் கொள்கை அடிப்படையில் வெற்றி பெறும் கூட்டணியாக இருக்க வேண்டும். தேர்தலில் 2 அல்லது 3 இடங்களை கேட்க திட்டமிட்டுள்ளோம்.

    2019-ல் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் நாங்கள் இடம்பெற்றோம். தற்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது இல்லை. புதிய அரசியல் சூழல் நிலவுகிறது.

    புதிய தமிழகம் கட்சி சுதந்திரமாக செயல்பட நினைக்கிறது. பாரதிய ஜனதா- அ.தி.மு.க. கூட் டணி என்பது காலம் கடந்துவிட்டது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து நாங்கள் இதுவரை முடிவுக்கு வரவில்லை.

    தமிழகத்தில் தற்போது 3 அணிகள் உள்ளன. நாங்கள் வெற்றிக்கூட்டணியில் இடம்பெறுவோம். பாராளுமன்றத்தில் எங்களது குரல் ஒலிக்க வேண்டும். அதுதான் எங்களின் நோக்கம் ஆகும். இம்முறை நாங்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இடம்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஆண்டு டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 25-ம் ஆண்டு விழா நடந்தது.
    • நான் தற்போது வரை பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவினரிடம் நட்பு ரீதியாக பழகி வருகிறோம்.

    குனியமுத்தூர்:

    டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

    இந்தநிலையில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக்கொண்டது. இதனால் அந்த கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் தனது ஆதரவு பா.ஜ.க.வுக்கா? அல்லது அ.தி.மு.க.வுக்கா? என்பதை முடிவு செய்யாமல் இருந்து வருகிறது.

    நேற்று பிரதமர் மோடி திருச்சி வருகை தந்தார். அவரை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்க செல்வதாக கூறப்பட்டது. ஆனால் அவர் பிரதமரை சந்திக்க செல்லவில்லை.

    இதனால் அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர் கிருஷ்ணசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்தித்தோம். அப்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க தான் தலைமை தாங்கியது.

    ஆனால் 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. தொடர்ந்து பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவுடன் நான் நட்பு ரீதியாகவே பழகி வருகிறேன்.

    கடந்த ஆண்டு டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 25-ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் எடப்பாடி, பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் எதிர்கூட்டணி பலமாக உள்ளது. நமது கூட்டணியை பலப்படுத்த வேண்டும். கூட்டணிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த நீங்கள் தமிழகம் வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நமது கூட்டணியும் பலப்படும் என தெரிவித்தார். அவரும் வருவதாக உறுதியளித்தார். ஆனால் கடைசி வரை வரவே இல்லை.

    மேலும் அண்ணாமலை பாத யாத்திரை தொடங்குவதற்கு முன்பு வரை அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி நீடித்தது. அவர் நடைபயணம் ஆரம்பித்த பின்னர் தான் கூட்டணிகளுக்குள் கருத்து வேறுபாடுகள், பிளவுகள் ஏற்பட்டன. குறிப்பாக அ.தி.மு.கவினர் கூட்டணியை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    பொதுவாக மாநில கட்சியுடன் தேசிய கட்சி கூட்டணி அமைத்தால், அந்த கூட்டணிக்கு மாநிலத்தில் இருக்க கூடிய கட்சி தான் தலைமை தாங்கும்.

    நான் தற்போது வரை பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவினரிடம் நட்பு ரீதியாக பழகி வருகிறோம். கூட்டணி குறித்து இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை தெரியப்படுத்துவோம்.

    தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எளிதாக தி.மு.கவை வென்று விட முடியும்.

    தி.மு.க தேர்தலின்போது 505 வாக்குறுதிகளை அளித்தது. அந்த வாக்குறுதிகளில் எதையுமே முழுமையாக நிறைவேற்றவில்லை. பாதிபாதியாகவே நிற்கிறது. மேலும் தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பு வந்து விட்டது. தி.மு.க. ஆட்சி ஏற்ற 4 மாதங்களிலேயே இது தெரிந்து விட்டது.

    இதனை பயன்படுத்தி நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் முதலில் பலமான கூட்டணியை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேவர்முக்குலம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, அக்கடையின் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தினந்தோறும் வாகன விபத்துக்களும் அதிகரித்துள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பானிப்பட்டியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேவர்முக்குலம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, அக்கடையின் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாரி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சரவணன் வரவேற்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இந்த டாஸ்மாக் உள்ளது. தினந்தோறும் வாகன விபத்துக்களும் அதிகரித்துள்ளது.

    இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதில், இளைஞரணி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய துணை செயலாளர் சிவபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • புதிய தமிழகம் கட்சி சார்பில் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அடைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரில் சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி புதிய தமிழகம் கட்சி சார்பில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி அறிவித்ததின் பேரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு மது ஒழிப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராசையா தலைமை தாங்கி னார்.

    மாவட்ட இணைச்செய லாளர் செல்வராஜ், துணைச் செயலாளர் தங்கபாண்டி தகவல் தொழில்நுட்ப பிரிவு வில்சன், ஓன்றிய செயலா ளர்கள் கந்தவேல், ராமையா, சரவணன், மாடசாமி, செல்வம், மணிகண்டன், நகர செயலாளர் சாமிதுரை ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அடைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து மது பாட்டில்களை உடைக்க முற்பட்ட போது போலீ சாருக்கும், ஆர்ப்பாட்டக் காாரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் முருகேசன், குருசாமி, முருகேஷ்வரசுந்தர், வேல்ராஜ், மரியதாஸ், அழகுமணி, பாண்டி, தூண்டி காளை, சுப்புராஜ், மங்கன், சாத்தர், கணேஷ் குமார், வேல்சாமி, காளி முத்து, கணேசன், அய்யனார், ஆரோக்கிராஜ், பால்ராஜ், பெருமாள், சாமி, முத்துராஜ், கோபால், கருப்பசாமி, இன்னாசி, மதியழகன், கருசாமி, முத்தாத்தாள், வெள்ளத்தாய், சுப்புலட்சுமி, ரஞ்சிதம், காசியம்மாள், ராதிகா, சின்னத்தாய், சுப்பு லட்சுமி, முத்து, மாடசாமி, வெள்ளச்சாமி, அய்யனசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீ சார் கைது செய்ய முற்பட்ட போது போலீசாருக்கும், கட்சியின ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய் யப்பட்டு தனியார் மண்ட பத்தில் அடைக்கப் பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஓட்டு வாங்கும் போது ஒரு கோரிக்கையை கொடுத்து விட்டு தற்போது அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகின்றனர்.
    • பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளக்கூடாது.

    நெல்லை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். சட்ட விரோதமாக உள்ள பார்கள் மற்றும் சந்து, பொந்துகளில் மது விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வோம், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம், உழைக்கும் மகளிர் அனைவருக்கும் ரூ. 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.

    ஆனால் 2½ வருடங்கள் முடிந்த பின்னரும் இன்னமும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இது அவர்களது பாராளுமன்ற தேர்தல் வாக்கு வங்கியை பாதிக்கும். ஓட்டு வாங்கும் போது ஒரு கோரிக்கையை கொடுத்து விட்டு தற்போது அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகின்றனர்.

    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதனை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது. அவர் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
    • ஆடி தபசு திருவிழாவுக்கு முன்பு சாலைகளை விரைந்து சரி செய்ய வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதிய தமிழகம் தேர்தல் முகவர்கள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட செயலாளர் ராசையா தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் செல்வராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட துணை செயலாளர் தங்கப்பாண்டி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொது செயலாளர் அய்யர், மாநில துணை அமைப்பு செயலாளர் சட்டமன்ற தொகுதி மேலிட பொறுப்பாளர் சுந்தரராஜ், மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் இரும்பொறை சேதுராமன், விருதுநகர் மாவட்ட இணைச் செயலாளர் குணம், குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமையா, குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சுகுமார், சங்கரலிங்கம், சுந்தர்ராஜ் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தரும் விதத்தில் அலுவலகம் முழுநேரம் செயல்படும் என நிர்வாகிகள் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

    சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளில் தோண்டி போடப்பட்டுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதை ஆடி தபசு திருவிழாவுக்கு முன்பு விரைந்து சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், புளியங்குடி நகர செயலாளர் சாமிதுரை, சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் கந்தவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் மாடசாமி, வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் உமர்கத்தா, நிர்வாகிகள் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் கிருஷ்ணசாமி புகார் அளித்தார்.
    • புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் கிருஷ்ணசாமி பதிவேற்றம் செய்தார்.

    சென்னை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை.

    இதுபோன்ற முறைகேடுகளால், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்தார்.

    மேலும் புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளார்.

    இவ்வாறு தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை ஆதாரம் இல்லாமல் சுமத்தியுள்ளதாக கிருஷ்ணசாமிக்கு எதிராக சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து உள்ளார்.

    அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.

    • புதிய தமிழகம் கட்சியின் 25-வது ஆண்டு நிறைவு வெள்ளிவிழா சிறப்பு மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை நடைபெறுகிறது.
    • வெள்ளி விழா மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் நிர்வாகிகள் செல்ல உள்ளனர்.

    தூத்துக்குடி:

    புதிய தமிழகம் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வக்கீல் பி.கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதாவது:-

    புதிய தமிழகம் கட்சியின் 25-வது ஆண்டு நிறைவு வெள்ளிவிழா சிறப்பு மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (15-ந்தேதி) நடைபெறுகிறது.

    மாநாட்டிற்கு நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி சிறப்புரை யாற்றி பேசுகிறார். ஸ்ரீவில்லி புத்தூரில் நடைபெறும் மாநாடு திருப்பு முனையாக அமையும்.

    500 வாகனங்களில்....

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறும். தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சிக்கு செல்வாக்கு உள்ள நிலையில் தென்மாவட்டங்களில் கட்சிக்கு பெரும் எழுச்சி கிடைத்து வருகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகி களும், தொண்டர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    வெள்ளி விழா மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் நிர்வாகிகள் செல்ல உள்ளனர். எனவே அதில் மாவட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் குடும்பத்துடன் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று நெல்லை கே.டி.சி நகரில் இருந்து அணி திரண்டு சென்று பங்கேற்றிட வேண்டும் என்று கனகராஜ் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் நடந்தது.

    மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் கதிரேசன், சுப்பிரமணியன், பாலசுந்தரராஜ், மாநில துணை அமைப்பு செய லாளர்கள் கிருபைராஜ், லிங்கராஜ், மாநில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கரு.ராஜசேகரன், மன்சூர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட துணை செயலாளர் மருதன்வாழ்வு ரவி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் அய்யர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனை களை வழங்கி பேசினார். கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி செயலாளர் கனகராஜ் பேசியதாவது:-

    வீரவணக்க நினைவஞ்சலி

    வரும் 23-ந் தேதி நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள தாமிரபரணி ஆற்றில் கூலி உயர்வுக்காக போராடி உயிர் நீத்த 17மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் உயிர் தியாகத்திற்கு வீரவணக்க நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

    வீரவணக்க நினைவஞ்சலி, வீரவணக்க பேரணி மற்றும் அதனைத்தொடர்ந்து அன்று மாலையில் தச்சநல்லூரில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    வீரவணக்க நினைவஞ்சலி மற்றும் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒரு ஒன்றியத்திற்கு 50வாகனம் என குறைந்தது 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று நெல்லை கே.டி.சி நகரில் இருந்து அணி திரண்டு சென்று பங்கேற்றிட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், மாநில தொண்டரணி அமைப்புக் குழு அசோக்குமார், மாநில மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, மாநில இளைஞரணி அமைப்பாளர் மாரிமுத்துகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் பெருமாள், அதிக்குமார்குடும்பர், ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி செந்தூர் பாண்டியன், ஓட்டப்பிடாரம் ஜேசிபி.முருகன்(மேற்கு), மனோகரன்(கிழக்கு), ஆழ்வை கேசவன், விளா த்திக்குளம் பெருமாள் (தெற்கு), உமையன்(கிழக்கு), கோவில்பட்டி சண்முகநாதன், கருங்குளம் சின்னத்துரை, கோவில்பட்டி நகர செயலாளர் மாடசாமி, தூத்துக்குடி மாநகர துணை செயலாளர் துரை, மாநகர இளைஞரணி செயலாளர் மாரியப்பன், மாநகர மீனவரணி செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். தூத்துக்குடி மாநகர செயலாளர் ரமேஷ், நன்றி கூறினார்.

    • புதிய தமிழகம் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • அப்பாவி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளித்திடவேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

    தூத்துக்குடி:

    விளாத்தி்குளம் தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களில் தனியார் காற்றாலை நிறுவனத்தினர் புதியதாக காற்றாலைகளை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் விளாத்திகுளம் பகுதி விவசாயிகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், உமையனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    விளாத்திகுளம் தாலுகாவிற்குட்பட்ட அருங் குளம், ஜக்கம்மாள்புரம், வள்ளிநாயகபுரம், மந்திகுளம், இலந்தைகுளம், லட்சுமி நாராயணபுரம், விரிசம்பட்டி, நெடுங்குளம், கன்னிமார்குட்டம், தத்தனேரி, துவரந்தை, குறளயம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.

    மானாவாரி பயிர் சாகுபடியை மட்டுமே நம்பி வாழ்ந்துவரும் இப்பகுதி விவசாய நிலங்களில் தற்போது தனியார் காற்றாலை நிறுவனத்தினர் புதியதாக காற்றாலை நிறுவும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். காற்றா லைகள் அமைப் பதற்காக நில உரிமை யாளர்களான விவசாயி களிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் அத்துமீறி இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    இதனால், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்துவரும் விளாத்திகுளம் தாலுகா பகுதி விவசாயிகள் வரும் காலங்களில் விவசாயமே செய்யமுடியாத அளவிற்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு கால்நடை களுக்கான மேய்ச்சல் தொழிலும் முடங்கியுள்ளது.

    விவசாய நிலங்களை பாழ்படுத்துவது குறித்து தட்டிக்கேட்கும் விவசாயிகள், பொதுமக்கள் மீது போலீசில் பொய் புகார் கொடுத்து வருகின்றனர். அத்துமீறி விவசாய நிலங்களை பாழ்படுத்தி வரும் தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு ஆதரவாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறையினர் இருந்து வருவது கண்டனத்திற்குரியதாகும்.

    பாதிக்கப்பட்டுவரும் அப்பாவி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளித்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.

    இதில், இளைஞரணி நிர்வாகிகள் காமராஜ், கதிரவன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×