search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரிவலம்வந்தநல்லூரில் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
    X

    கரிவலம்வந்தநல்லூரில் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்

    • புதிய தமிழகம் கட்சி சார்பில் டாஸ்மாக் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அடைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரில் சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி புதிய தமிழகம் கட்சி சார்பில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி அறிவித்ததின் பேரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு மது ஒழிப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராசையா தலைமை தாங்கி னார்.

    மாவட்ட இணைச்செய லாளர் செல்வராஜ், துணைச் செயலாளர் தங்கபாண்டி தகவல் தொழில்நுட்ப பிரிவு வில்சன், ஓன்றிய செயலா ளர்கள் கந்தவேல், ராமையா, சரவணன், மாடசாமி, செல்வம், மணிகண்டன், நகர செயலாளர் சாமிதுரை ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அடைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து மது பாட்டில்களை உடைக்க முற்பட்ட போது போலீ சாருக்கும், ஆர்ப்பாட்டக் காாரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் முருகேசன், குருசாமி, முருகேஷ்வரசுந்தர், வேல்ராஜ், மரியதாஸ், அழகுமணி, பாண்டி, தூண்டி காளை, சுப்புராஜ், மங்கன், சாத்தர், கணேஷ் குமார், வேல்சாமி, காளி முத்து, கணேசன், அய்யனார், ஆரோக்கிராஜ், பால்ராஜ், பெருமாள், சாமி, முத்துராஜ், கோபால், கருப்பசாமி, இன்னாசி, மதியழகன், கருசாமி, முத்தாத்தாள், வெள்ளத்தாய், சுப்புலட்சுமி, ரஞ்சிதம், காசியம்மாள், ராதிகா, சின்னத்தாய், சுப்பு லட்சுமி, முத்து, மாடசாமி, வெள்ளச்சாமி, அய்யனசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீ சார் கைது செய்ய முற்பட்ட போது போலீசாருக்கும், கட்சியின ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய் யப்பட்டு தனியார் மண்ட பத்தில் அடைக்கப் பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×