செய்திகள்
கோப்பு படம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டக்குப்பத்தில் கடைகள் அடைப்பு

Published On 2020-02-25 11:49 GMT   |   Update On 2020-02-25 11:49 GMT
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டக்குப்பம் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து இஸ்லாமிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சேதராப்பட்டு:

மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும், என்.பு.ஆர். என்.ஆர்.சி போன்ற கருப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் பகுதியில் மக்கள் நலக்குழுவினர் அப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து தங்களின் எதிர்ப் புகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டு கண்ட கோ‌ஷங்களை எழுப்பினர். குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News