செய்திகள்
தற்கொலை

போச்சம்பள்ளி அருகே இளம்பெண் திடீர் தற்கொலை- ஆர்.டி.ஓ. விசாரணை

Published On 2020-02-24 14:46 GMT   |   Update On 2020-02-24 14:46 GMT
போச்சம்பள்ளி அருகே திருமணமாகி 1 1/2 வருடம் ஆன நிலையில் இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.




போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ள முருக்கம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது25). இவருடைய மனைவி ரம்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 1 1/2 வருடம் ஆன நிலையில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும்  இருவருக்கும் குடும்ப தகராறு நடந்ததாக தெரிகிறது. 

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரம்யா நேற்றுமாலை  வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுஅதிகாலை பரிதாபமாக ரம்யா உயிரிழந்தார்.

இது குறித்து பாரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1 1/2 வருடம் ஆன நிலையில் ரம்யா இறந்ததால் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News