செய்திகள்
விபத்து காயம்

மேலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து 12 பேர் படுகாயம்

Published On 2020-02-24 06:49 GMT   |   Update On 2020-02-24 06:49 GMT
மேலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து 12 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரை மாவட்டம் மேலூர் தும்பைப்பட்டியை அடுத்துள்ள அட்டப்பட்டியில் அய்யனார் கோவில் உள்ளது. இங்கு தற்போது கோவில் திருவிழா நடந்து வருகிறது. இன்று காலை சேக்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 12 பேர் ஷேர்ஆட்டோவில் கோவிலுக்கு புறப்பட்டனர். கோட்டப்பட்டி 4 வழி சாலையில் வந்துகொண்டிருந்தபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் அங்குள்ள பஸ்நிறுத்தத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.

ஆட்டோவில் பயணம் செய்த சேக்கிப்பட்டியை சேர்ந்த பால்ராஜ், அவரது மனைவி சுலோச்சனா மற்றும் பாண்டியம்மாள், ஜோதியம்மாள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை ஓட்டிய சங்கர் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News