செய்திகள்
சூலூரில் வடமாநில வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
சூலூரில் வடமாநில வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீப் மாலிக் (24). இவர் கோவை சூலூரில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வேலையை முடித்து அறைக்கு சென்றார்.
பின்னர் அடுத்த நாள் காலை அவர் வேலைக்கு வராததால் அவரது நண்பர், பிரதீப் மாலிக்கை தேடி அறைக்கு சென்றார். ஆனால் அவர் அங்கு இல்லை. பின்னர் அவரை தேடி பார்த்த போது அருகில் உள்ள மரத்தில் பிரதீப் மாலிக் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதுகுறித்து அவரது நண்பர் சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.