செய்திகள்
கொடைக்கானலில் ஜீப் டிரைவருக்கு அரிவாள் வெட்டு
கொடைக்கானலில் ஜீப் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நாயுடு புரம் பகுதியில் வாடகை ஜீப் ஸ்டாண்டு உள்ளது. இங்கு ராஜாமணி என்பவர் ஓட்டுனராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு ராஜாமணிதான் காரணம் என மோகன் நினைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மோகன் ராஜாமணியை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினார். அப்போது மோகன் கஞ்சா போதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த ராஜாமணியை தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிக்சைக்காக சேர்த்தனர். மோகன் கொடைக்கானல் போலீசில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.