செய்திகள்
மாயம்

களக்காட்டில் குழந்தையுடன் இளம்பெண் மாயம்

Published On 2020-02-16 13:34 GMT   |   Update On 2020-02-16 13:34 GMT
களக்காட்டில் குழந்தையுடன் ஆஸ்பத்திரிக்கு சென்ற இளம்பெண் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

களக்காடு:

களக்காடு-நாங்குநேரி சாலையில் ஸ்டீல்ஸ் கடை நடத்தி வருபவர் கர்ணதாஸ் மகன் ஜான் (வயது 29). இவருடன் அவரது சகோதரி சுஜாவும் (32) தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 12-ந் தேதி சுஜா தனது 4 வயது மகன் அஜிஸ்சுடன் களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜானின் மனைவியை பார்த்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் சுஜா வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து ஜான் தனியார் மருத்துவமனைக்கு சென்று தனது மனைவியிடம் சுஜா பற்றி கேட்டபோது அவர் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடியும் சுஜா மற்றும் அவரது மகன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

எனவே இது குறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மகனுடன் மாயமான சுஜாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News