செய்திகள்
கோப்பு படம்

காதலனுடன் மாயமான பெண்ணை மீட்க ரூ.5 லட்சம் கேட்ட வாலிபர்கள் மீது புகார்

Published On 2020-02-13 11:55 GMT   |   Update On 2020-02-13 11:55 GMT
மதுரையில் காதலுடன் வீட்டை விட்டு ஓடி சென்ற மகளை மீட்க ரூ.5 லட்சம் வாங்கி விட்டு திருப்பி தராத வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை:

மயிலாடுதுறை சீனிவாசபுரம் இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் மனைவி ஷீலா (வயது 42), திருப்பரங்குன்றம் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனது மகள் சுவாதி, கடந்த 5-ந் தேதி மதுரையைச் சேர்ந்த மோகன் பாண்டியன் என்பவருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். அவரை மீட்டுத்தருவதாக திருப்பாலை விஸ்வா நகர் மகிழ்மாறன், விராட்டிப்பத்து சுமேஸ்வரன் (36) கூறினர்.

இதற்காக அவர்கள் ரூ.5 லட்சம் கேட்டனர். அதனை நான் கொடுத்தேன். ஆனால் இதுவரை மகளை மீட்டுத்தரவில்லை. பணத்தையும் தர மறுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகிழ்மாறன், சுமேஸ்வரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News