செய்திகள்
கைது

கோவையில் தாய்-தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது

Published On 2020-02-09 11:53 GMT   |   Update On 2020-02-09 11:53 GMT
கோவையில் தாய்-தந்தையை வெட்டி கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை அருகே உள்ள விராலியூர் இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம் (60). இவரது மனைவி துளசி (50). இவர்களது மகன்கார்த்திகேயன் (30). கூலித்தொழிலாளி.

இவர் தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால் அவரது மனைவி கடந்த 5 வருடங்களுக்கு முன் பிரிந்து சென்றார்.

இதையடுத்து கார்த்திகேயன் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்தார். அப்போதும் அவர் குடித்துவிட்டு தனது தாய், தந்தையுடன் தகாறில் ஈடுபட்டு வந்தார்.

இது தொடர்பாக தந்தை சுந்தரம் ஆலாந்துறை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் கார்த்திகேயனை அழைத்து எச்சரித்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த கார்த்திகேயன் பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் வீட்டில் இருந்த அரிவாளால் தந்தை சுந்தரம், தாய் துளசி ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்து விட்டு தலைமறைவான கார்த்திகேயனை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் நரசீபுரம் அருகே கார்த்திகேயன் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்த கார்த்திகேயனை கைது செய்தனர்.

Tags:    

Similar News