செய்திகள்
அம்பையில் தவறி விழுந்து தொழிலாளி பலி
அம்பையில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
அம்பை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பொத்தை கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி லாரன்ஸ்(வயது 45), கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று இரவு மது போதையில் அந்தோணி லாரன்ஸ் வீட்டு மாடிப்படியில் ஏறி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தள்ளாடி கீழே உள்ள கிரில் கேட்டில் விழுந்தார்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.