செய்திகள்
மோசடி

நிலக்கோட்டையில் பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி: கணவன்-மனைவி கைது

Published On 2020-02-06 10:45 GMT   |   Update On 2020-02-06 10:45 GMT
நிலக்கோட்டையில் பெண்ணிடம் மோசடி செய்த கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சி.எஸ்.ஐ. தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன் மனைவி வசந்தா (வயது 57). இவரது பெரியார் காலனி வீட்டில் நிலக்கோட்டையைச் சேர்ந்த பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் வாடகைக்கு குடியிருந்தனர்.

நித்யா தான் திருப்பூர், வத்தலக்குண்டுவில் கார்மென்ட்ஸ் கடை வைத்திருப்பதாக கூறியுள்ளார். வசந்தா தனது மகன் சரவணனை அதில் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதற்காக ரூ.14 லட்சத்து 2 ஆயிரத்தை நித்யாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் கணக்கு வழக்கு தவறாக இருந்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தனது பணத்தை திருப்பி தருமாறு வசந்தா கேட்டுள்ளார். ஆனால் நித்யா மற்றும் பழனிச்சாமி ஆகியோர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரனிடம் அளித்த புகாரின் பேரில் 6 பேர் மீது வழக்குபதிவு செய்து நித்யா மற்றும் பழனிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News