செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

Published On 2020-02-06 09:08 GMT   |   Update On 2020-02-06 09:08 GMT
புதுவையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் ஒருவருக்கு தனி வார்டு அமைத்து மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
புதுச்சேரி:

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நோய் சிங்கப்பூர் உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது.

இதற்கிடையே புதுவையை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவை திரும்பினார்.

அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் நோய் அறிகுறியுடன் இருந்ததால் அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் புதுவை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது பெயர் விவரம் அறிவிக்கப்படவில்லை.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தனி வார்டு அமைத்து மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவுகள் வந்த பிறகே அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது தெரிய வரும். தொடர்ந்து அந்த நபருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News