செய்திகள்
விவசாயி தற்கொலை

ஆழ்வார்திருநகரியில் வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2020-02-06 07:36 GMT   |   Update On 2020-02-06 07:36 GMT
ஆழ்வார்திருநகரியில் வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி மாதாங்கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் தளவாய்(வயது 35), விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தளவாய்க்கும், அவரது மனைவிக்கும் ஏதோ குடும்ப பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த தளவாய் கடந்த 3-ந்தேதி அப்பகுதியில் உள்ள ஆற்றுரங்கால் வாய்க்கால் அருகே பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, அவரை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிக்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News