செய்திகள்
தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொன்ற கணவன்
ராஜபாளையம் அருகே குடும்ப தகராறில் மனைவி தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் ரெட்டியன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 30). இவருக்கும், சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த காளிமுத்து (35) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 10 மற்றும் 6 வயதில் 2 மகன்கள் உள்ளனர். மேட்டூரில் வசித்து வந்த இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபாளையத்துக்கு குடிபெயர்ந்தனர். இங்கு காளிமுத்து மில் வேலையில் சேர்ந்தார்.
தனது பெற்றோர் வீட்டில் மகன்களை விட்டுவிட்டு, ராஜம்மாளும், கருப்பசாமியும் சுப்புராஜ் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்தனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று இரவும் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் அனைவரும் உறங்கி விட்டனர். அதிகாலையில் திடீரென கண் விழித்த காளிமுத்து, தூங்கிக்கொண்டிருந்த ராஜம்மாள் தலையில் கல்லை தூக்கிப்போட்டுள்ளார். இதில் தலை நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதனைத் தொடர்ந்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையம் சென்ற காளிமுத்து, மனைவியை கொலை செய்ததை கூறி சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் மாரியப்பன் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜம்மாள் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடும்ப தகராறில் மனைவியை, கணவரே கொலை செய்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம் ரெட்டியன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 30). இவருக்கும், சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த காளிமுத்து (35) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 10 மற்றும் 6 வயதில் 2 மகன்கள் உள்ளனர். மேட்டூரில் வசித்து வந்த இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபாளையத்துக்கு குடிபெயர்ந்தனர். இங்கு காளிமுத்து மில் வேலையில் சேர்ந்தார்.
தனது பெற்றோர் வீட்டில் மகன்களை விட்டுவிட்டு, ராஜம்மாளும், கருப்பசாமியும் சுப்புராஜ் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்தனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று இரவும் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் அனைவரும் உறங்கி விட்டனர். அதிகாலையில் திடீரென கண் விழித்த காளிமுத்து, தூங்கிக்கொண்டிருந்த ராஜம்மாள் தலையில் கல்லை தூக்கிப்போட்டுள்ளார். இதில் தலை நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதனைத் தொடர்ந்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையம் சென்ற காளிமுத்து, மனைவியை கொலை செய்ததை கூறி சரண் அடைந்தார். இன்ஸ்பெக்டர் மாரியப்பன் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜம்மாள் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடும்ப தகராறில் மனைவியை, கணவரே கொலை செய்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.