search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜபாளையம் கொலை"

    ராஜபாளையம் அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள தென்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 57). கணவரை இழந்த இவர், மேட்டு வடகரையில் உள்ள தனியார் பள்ளியில் சமையல் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து காளியம்மாளை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் நகைகளை திருடிச் சென்றதாக தெரிகிறது.

    இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் கீழராஜகுலராமன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் அங்கு வந்து பார்த்தபோது காளியம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

    இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், காளியம்மாள் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×