செய்திகள்
அவனியாபுரத்தில் 9ம் வகுப்பு மாணவி கடத்தல்- வாலிபர் மீது புகார்
அவனியாபுரத்தில் 9-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
அவனியாபுரம் எம்.எம்.சி. காலனியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளிக்கு சென்று வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ராஜாஉசேன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி அதன் பிறகு மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் தந்தை அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகள் ராஜா உசேனால் கடத்தப்பட்டு இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
கரிமேடு முரட்டான் பத்திரி பகுதியைச் சேர்ந்தவர் வீரையா. இவரது மகள் மீனபிரியதர்ஷினி (21). பட்டதாரியான இவர் போட்டி தேர்வுகளுக்கு ஆரப்பாளையத்தில் உள்ள ஒரு மையத்தில் படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து சென்ற மீனபிரியதர்ஷினி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெடுமதுரை வடக்கு தெரு அம்மாசி மகள் நித்யா (17). பெருங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர் கடந்த 1-ந்தேதி மாயமானார்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர்.
அவனியாபுரம் எம்.எம்.சி. காலனியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளிக்கு சென்று வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ராஜாஉசேன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி அதன் பிறகு மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் தந்தை அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகள் ராஜா உசேனால் கடத்தப்பட்டு இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
கரிமேடு முரட்டான் பத்திரி பகுதியைச் சேர்ந்தவர் வீரையா. இவரது மகள் மீனபிரியதர்ஷினி (21). பட்டதாரியான இவர் போட்டி தேர்வுகளுக்கு ஆரப்பாளையத்தில் உள்ள ஒரு மையத்தில் படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து சென்ற மீனபிரியதர்ஷினி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெடுமதுரை வடக்கு தெரு அம்மாசி மகள் நித்யா (17). பெருங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர் கடந்த 1-ந்தேதி மாயமானார்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர்.