செய்திகள்
விபத்து

உப்பிலியபுரம் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

Published On 2020-01-28 15:00 GMT   |   Update On 2020-01-28 15:00 GMT
உப்பிலியபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் தனது காரில் சென்று விட்டு வீடு திரும்பினார். காரை நாகநல்லூரை சேர்ந்த சரவணன் ஓட்டி வந்தார். அப்போது கார் கிருஷ்ணாபுரம் அருகே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.  

கார் தனது கட்டுபாட்டை இழந்து ரோட்டில் உள்ள மரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் ஒக்கரையை சேர்ந்த சுகர்ன பாபு (வயது 45) என்பது தெரியவந்தது.  இவருக்கு திருமணமாகி மனைவியும் , ஒரு மகன், மகளும் உள்ளனர். விபத்து குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News